Wednesday, 26 February 2014

பாதாமில் என்ன இருக்கிறது ????

நல்லதா, கெட்டதா? சாப்பிடலாமா, கூடாதா எனக் குழம்ப வைக்கிற ஒரு சில உணவுகளில் பாதாமும் ஒன்று. உண்மைதான் என்ன?

பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். ‘அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்... இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள்?’ என்பதுதானே உங்கள் சந்தேகம்? ஏற்கனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

இன்னும் சொல்லப் போனால், பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது. சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமேகூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.

பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது. வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும். நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

வேறு எந்த தானியங்களிலும் இல்லாத அளவுக்கு பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது. அது பல், முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. அழகை மேம்படுத்துவதிலும் பாதாமுக்கு முக்கிய இடமுண்டு. பாதாமில் உள்ள வைட்ட மின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது. சரும நிறத்தை மேம்படுத்தும். சருமத்தைப் பளபளப்பாக வைக்கும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும்.

பாதாமில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பானது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு போஷாக்கு தரும். பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்.

மார்ச் 1 தளபதி பிறந்தநாள் போஸ்டர்



Tuesday, 25 February 2014

இலக்கியா




 

தலைவர் வீட்டில்



என்னுடைய இலக்கியா

srv.rajasekar: 25 jaunavary

srv.rajasekar: 25 jaunavary

வாழ்க வீரபாண்டியார்



2001 ல் அண்ணன் மற்றும் தலைவருடன்



2001 சட்டமன்ற தேர்தல் பனி &1997 ஜெயின் கமிஷன் எதிர்த்து போராட்டம்


 

kazhaka paniyil nan



thalaivarudan nan


25 jaunavary









jaunavary 25



அதிமுக எப்போதும் புதியவர்கள், சாதாரண தொண்டர்களை ?

அதிமுக எப்போதும் புதியவர்கள், சாதாரண தொண்டர்களை எல்லாம் வேட்பாளராக அறிவிப்பதற்கு, சிலர் வரவேற்று, அதிமுகவில் மட்டும்மே இது சாத்தியம் என்று சொல்கிறார்கள்...பார்க்கப்போனால், அதிமுகவில், எவருக்கு எந்த நேரத்தில் பதவி வரும் / போகும் என்பதற்கு எந்த ஒரு உறுதியும் கிடையாது...நேற்று பெரிய பதவில் இருந்தவர், தெருவில் வீசப்படுவதும், மூலையில் இருபவருக்கு அதிஷ்டம் அடிப்பதை போல பதவிகிடைப்பதும், தெருவில் வீசப்பட்டவரை மீண்டும் பதவியில் அமரவைப்பதும் சாதாரணம்...

இந்த போக்கினால், கட்சியில் படிப்படியாக உயர்பவர்களுக்கு/உயர்ந்தவர்களுக்கு எந்த மதிப்பும் மரியாதையும் கிடைப்பதில்லை....லாட்டரி போல பதவி கிடைத்தவர்களுக்கும், அந்த பதவியின் முக்கியத்துவம் தெரிவதில்லை, புரிவதில்லை...ஏனென்றால், இந்த பதவி, எந்த ஒரு கஷ்டமும் படாமல், உயர்ந்து படிப்படியாய் மேலேவராமல் வெறும்மனே, அதிஷ்டத்தால் பெற்ற பதவி..இன்று இருக்கும், நாளை போகும் என்பதால், இருக்கும் வரை பலனடையுவும்மே முயல்கிறார்கள்...

அடுத்தமுறை வாய்ப்பு கிடைக்காது, கொடுக்கமாட்டார்கள் என்பதால், தேர்தெடுத்த தொகுதி மக்களுக்கும் பெரிய நன்மைகளை செய்வதும் கிடையாது...வாய்ப்புகள் தொடர்ச்சியாய் கிடைக்கும் என்றால்தான், தொகுதிக்கு நன்மைசெய்யவோ, திட்டங்கள் கொண்டுவரவோ முயற்சிப்பார்கள்....இல்லாவிட்டால், வெறும்மனே பதவியில் இருந்துவிட்டு சென்றுவிடுவர்...

உதாரணத்துக்கு, எங்கள் சொந்த ஊரிலும், அதிமுக & திமுக மாறி மாறி வெற்றிபெறுகிறார்கள், அதிமுகவில் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாய் யாராவது வருகிறார்கள்...தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் என்று பார்த்தால், சாலைகள், பாலம், நீதிமன்ற கட்டிடங்கள், பேருந்து நிலையம், குடிநீர் திட்டங்கள், சிமென்ட் சாலைகள், அரசு மருத்துவமனை விரிவாக்கம், அரசு கல்லூரி என பல பல....இவைகள் பெரும்பாலும் திமுக MLAக்களால் அதிகஅளவில் செய்யப்பட்டுள்ளது...

திமுக மாவட்ட பொறுப்பில் உள்ளவர்களால், நேரடியாக கலைஞரிடம்மோ, ஸ்டாலினிடம்மோ நேரடியாக பேசி, தங்கள் பகுதிக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ள உரிமை இருக்கிறது. அப்படி எத்தனையோ திட்டங்களை தமிழகம் முழுதும் சொல்லமுடியும்....ஆனால், எந்த ஒரு அதிமுக மாசெவோ, அமைச்சரோ, ஜெயாவிடம் நேரிலோ, போன் மூலமாகவோ இப்படி பேச முடியும்மா???

மொத்த வேட்ப்பாளர்களில் 25% புதியவர்களுக்கு வாய்ப்பு தரலாம், ஆனால் அவர்கள், கட்சி அளவில் படிப்படியாக ஓரளவிற்கு வளர்ந்திருக்கவேண்டும், சும்மா மூலையில் உட்கார்ந்துகொண்டு மிக்ஸ்சர் சாப்பிட்டுக்கொண்டு இருப்பவருக்கு திடீர் என்று கட்சி டிக்கெட் கொடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தால், அங்கே சென்றும் அதைதான் சாப்பிட்டுகொண்டிருப்பார்...

calender 2014


கலைஞர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து

கலைஞர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து

கலைஞரின் தனிபெரும் சிறப்பு 70 ஆண்டுகால இடைவிடாத போராட்டம், போராட்டம் என்பது கலைஞருக்கு சுவாசம். பொதுவாழ்வின் முதல் தகுதி அவமானம் என்றார் பெரியார். தமிழ்நாட்டில் அதிகமான அவமானத்தை சந்தித்தவர் கலைஞர் மட்டும்தான். கலைஞர் ஆலமரமோ , அரசமோ அல்ல அவர் ரப்பர் மரம். ரப்பர் மரத்துக்கு ரனங்கள் புதிதல்ல, வெட்ட வெட்ட பால் சுரக்கும், கலைஞரும் அப்படித்தான்.

தமிழ்நாடு பக்தி சமுதாயமாக, அடிமை சமுதாயமாக ,ஏவல் சமுதாயமாக இருந்த நிலையிலிருந்து அறிவுசமுதாயமாக இருக்கவேண்டும் என்று நினைத்தவர் கலைஞர் தேசிய விருது பெற்று வாழ்த்து பெற சென்ற நேரத்தில் எத்தனையாவது விருது என்று கேட்டார் ஆறாவது முறை பெற்ற விருது என்றேன், என்னால் தான் ஆறாவது முறை முதல்வராக முடியவில்லை நீங்களாவது ஆறாவது முறையாக பெற்றீர்கள் என்று நகைச்சுவை பொங்க சொன்னார்.தமிழுக்கு என்றும் அவர்தான் முதல்வர். ஆறு தேசிய விருதுக்கும் எனக்கு கலைஞர் அறிவித்த சால்வையை பத்திரமாக வைத்திருக்கிறேன்.
கடந்தமுறை ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கலைஞர் கருணாநிதியை முத்துகருப்பண் தலைமையிலான போலிஸ்படை அராஜகமான முறையில் கைது செய்தது.

இந்நிகழ்வு உடனடியாக சன் டிவி ஒளிபரப்பியது. அரசியல்வாதிகள், மக்கள்கள் கொதித்தெழ அவர் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான அவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ஒரு நிருபர் கருணாநிதியிடம் உங்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் முன்விரோதம் ஏதாவது உண்டா? என்று கேட்க

அதற்கு அவர், நான் என்ன சுதாகரனா? என்றார்.

கைதிலிருந்து, விடுதலைவரை அவர் அடைந்த துன்பத்தின் சுவடுகூட மாறாத நிலையிலும் அவரின் நகைச்சுவை உணர்வு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த நேரத்தில் அந்த நகைச்சுவை யாருக்கு வரும்?.

கலைஞர் செயலாற்றலுக்கு ஒரு உதாரணம் - மறைமலை அடிகள் நூலகம் பராமரிப்பற்று இருக்கிறது என்று தகவல் வந்தபோது தலைவரிடம் தொலைபேசியில்ன்பேசினேன், சரி பார்ப்போம் என்றார். சிறிது நேரத்தில் தங்கம் தென்னரசு போன் செய்து கலைஞர் ஆணையிட்டிருக்கிறார் மறைமலை நூலகத்திற்கு போய்க்கொண்டிருக்கிறேன் என்றார். காமராஜர் ஆகட்டும் பார்க்கலாம் என்பார் கலைஞர் ஆயிற்று பார்த்தாயா என்பார். தமிழ்சமுதாயமே நீயாவது நன்றியுள்ளவனாக இரு.
கலைஞர் ஒரு திரைக்காவியம் என்ற தலைப்பில் குஷ்பு ஆற்றிய உரை:

எட்டு வயதில் பள்ளியில் சீட் வேண்டும் என்று கேட்ட போராட்டம் 88 வயது வரை தொடர்ககிறது . போராட்டத்தை கண்டு தலைவரும் அஞ்சுவதில்லை அவரை பின்பற்றுகின்ற தொண்டர்களும் அப்படித்தான்.

மூட நம்பிக்கை, பெண்ணடிமை, ஏழை பணக்கார ஏற்றத்தாழ்வு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவைகளை வசனமாக்கினார், மக்கள் கைதட்டினார்கள், ஓட்டுபோட்டார்கள், வசனங்கள் எல்லாம் சட்டமானது.


எ‌ன் ‌மீது வ‌ஞ்ச‌ம் ‌தீ‌ர்‌க்கு‌ம் படல‌‌ம் - கருணா‌நி‌தி

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ரு‌ம், மு‌ன்னா‌ள் முத‌ல்வருமான கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

இது தொட‌ர்பாக தொ‌ண்ட‌ர்களு‌க்கு அவ‌ர் எழு‌‌தியு‌ள்ள கடித‌‌த்‌தி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது :

தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் காலகட்டம் இது. இதற்கு என்ன காரணம்?

இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட தொகுதிகளின் கணக்கா? தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா என்ற கேள்விகளுக்குள் போக விரும்பவில்லை.

இந்தியாவில் அல்லது தமிழகத்தில் அதிகாரச் செல்வாக்கைப் பெருக்கி ஏராளமாகப் பணம் சம்பாதித்துள்ளது கருணாநிதியின் குடும்பம் என்று தேர்தலில் பிரசாரம் செய்தவர்கள் இப்போதும் அதே பிரசாரத்தைத் தொடர்கிறார்கள்.

அவற்றில் உண்மை ஏதும் இல்லை என்பதைத் தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து தயாளு அம்மாள் பிரிந்தபோது கிடைத்த ரூ.100 கோடியில் வருமான வரி போக மீதி ரூ.77.5 கோடி கிடைத்தது. அதைப் பகிர்ந்து கொண்டபோது, கனிமொழிக்கு ரூ.2 கோடி கிடைத்தது. அதை பங்குத் தொகையாகச் செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.

கனிமொழி அதை விரும்பாவிட்டாலும், அப்பா சொல்கிறாரே என அதற்கு ஒப்புதல் அளித்த குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் அவர் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாப, நட்டத்தில் பங்குதாரராவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் பொறுப்பாக ஆவதில்லை.

தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜேட்மலானி, இதைத் தெளிவாக சுட்டிக்காட்டியும், கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரையும், கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி - வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

அப்போதும் அத்துடன் நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், கட்சிக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என தவம் கிடப்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

இறுதிப் போரில் வெல்வோம்: இந்த விவரங்களைத் தொண்டர்கள் படித்து புரிந்துகொண்டு செயல்படுத்தினால், அறப்போர்க் கணைகளை பல ஆயிரம் இளைஞர்கள் வடிவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது நிச்சயம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.